» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை : கந்துவட்டி கொடுமையால் பரிதாபம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:32:19 PM (IST)
கடையநல்லூர் அருகே கந்துவட்டி கொடுமையால் 100 அடி உயர மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி பகுதியை சார்ந்தவர் முருகன் மனைவி லெட்சுமி. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். முருகன் அதே பகுதியைச் சார்ந்த மாரியம்மாள் என்பவரிடம் ஆறு லட்ச ரூபாய் கடன் வாங்கி உள்ளார். தற்போது வட்டியும் அசலும் சேர்த்து 9 லட்சம் ரூபாய் தர வேண்டும் அல்லது வீட்டை எழுதி தர வேண்டும் என்று கேட்டுள்ளார்
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது மாரியம்மாள் முருகன் லட்சுமி இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த லெட்சுமி சொக்கம்பட்டி பகுதியில் உள்ள மலையில் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் செயலிகள் மூலம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:57:36 PM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:53:27 PM (IST)

ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி எஸ்எம்எஸ்: அங்கன்வாடி பணியாளர் அதிர்ச்சி!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:25:46 PM (IST)

அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் வீடுபுகுந்து மிரட்டல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:42:06 PM (IST)

இப்போதாவது மனம் திருந்திய மத்திய அரசு : ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:19:10 PM (IST)

இபிஎஸ் முதுகில் குத்தியதாக நான் சொல்லவே இல்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:13:30 PM (IST)
