» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி எஸ்எம்எஸ்: அங்கன்வாடி பணியாளர் அதிர்ச்சி!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:25:46 PM (IST)
நெல்லையில் ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி குறுந்தகவல் வந்ததால் அங்கன்வாடி பணியாளர் கடும் அதிர்ச்சியடைந்தார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மருதகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மனைவி சேபா (43) இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மாரியப்பன் உடல்நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் சேபா தனது மூன்று குழந்தைகளோடு தந்தை ஆசிர்வாதத்தின் அரவணைப்பில் மருதகுளத்தில் வசித்து வருகிறார் மேலும் சேபா அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வரும் நிலையில் செப்டம்பர் மாதத்துக்கான மின் கட்டணத்தை அளவீடு செய்ய நேற்று மின் ஊழியர்கள் வந்துள்ளார்.
கட்டணம் அளவீடு எடுத்து விட்டுச் சென்ற நிமிடங்களில் சேபாவின் செல்போனிற்கு வந்த குறுந்தகவலில் மின் கட்டணம் ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 என வந்ததைக் கண்டு சேபா கடும் அதிர்ச்சி அடைந்தார் வழக்கமாக அதிகபட்சம் 500 ரூபாய் மட்டுமே கட்டணம் வரும் நிலையில் திடீரென கோடிக்கணக்கில் மின் கட்டணம் வந்ததைக் கண்டு மிரண்டு போன சேபா மூலைக்கரைப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் இதுதொடர்பாக முறையிட்டார்.
அதன் பெயரில் இன்று மின் ஊழியர்கள் சேபா வீட்டுக்கு சென்று மின்மீட்டரை பரிசோதனை செய்தபோது அளவீடு செய்ததில் குளறுபடி நடந்தது தெரியவந்தது இதையடுத்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி குளறுபடியை சரி செய்தனர் அதன்படி சேபாவுக்கு வெறும் 494 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் வந்தது.
இந்த குளறுபடி குறித்து நாங்குநேரி உதவி செயற்பொறியாளர் ஆஷாவிடம் கேட்டபோது, மின் கட்டணம் அளவீடு செய்த போது நடந்த தவறால் இந்த பிரச்சனை வந்துள்ளது. அதாவது சேபா வீட்டில் எங்கள் ஊழியர் ரீடிங் எடுக்கும்போது சரியான மின் அளவு 14109 KWH என காட்டி உள்ளது ஆனால் அவர் அதை கணினியில் பதிவேற்றம் செய்யும்போது தவறுதலாக 1410907 KWH என பதிவேற்றம் செய்துவிட்டார்.
ஒரு டிஜிட் எண் கூடுதலாக சேர்க்கப்பட்டதால் லட்சக்கணக்கிலான யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாக மின் கட்டணம் வந்துள்ளது. இது குறித்த தகவல் கிடைத்தவுடன் மூலைக்கரைப்பட்டி உதவி பொறியாளர் மூலம் செயற்பொறியாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு பிரச்சனை உடனடியாக சரி செய்யப்பட்டது என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் செயலிகள் மூலம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:57:36 PM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:53:27 PM (IST)

அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் வீடுபுகுந்து மிரட்டல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:42:06 PM (IST)

இப்போதாவது மனம் திருந்திய மத்திய அரசு : ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:19:10 PM (IST)

இபிஎஸ் முதுகில் குத்தியதாக நான் சொல்லவே இல்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:13:30 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 51.1 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு : சபாநாயகர் அப்பாவு தகவல்
வியாழன் 4, செப்டம்பர் 2025 3:34:38 PM (IST)
