» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆன்லைன் செயலிகள் மூலம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!

வியாழன் 4, செப்டம்பர் 2025 8:57:36 PM (IST)

ஆன்லைன் செயலிகளை முறைகேடாக பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: Google Playstore-ல் Grindr (Gay Dating & Chat) Application பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில், முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் (Chat) செய்யும் வசதி உள்ளது. இந்த செயலியின் மூலம் சில நபர்கள் பொதுமக்களை குறிப்பாக இளம் வயதினரை, ஏமாற்றி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இச்செயலியினால் முகம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு, அதன் மூலம் பழக்கத்தினை ஏற்படுத்தி, ஆசை வார்த்தைகள் கூறி, ஓரின சேர்க்கைக்காக தனிமையில் அழைத்து சென்று, அவர்களை நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்து மிரட்டியும், அடித்து துன்புறுத்தியும், அவர்களிடமிருந்து பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை வழிப்பறி செய்து வருகின்றனர். இது சம்மந்தமாக கிடைக்கப்பெறும் புகார் மனுக்களின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் இது போன்ற குற்ற செயல்புரியும் எண்ணத்தோடு சமூக வலைதளங்கள், பிற தகவல் ஊடகங்கள் ஆகியவற்றில் தங்களை அணுகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும், இதுபோன்ற ஆன்லைன் செயலிகளை தவறான முறையில் பயன்படுத்தி மோசடி குற்றத்தில் ஈடுபடும் நபர்களிடம் ஏமாறாமல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் Grindr App (கிரைண்டர் ஆப்) மற்றும் அதைப் போன்ற வேறு ஆன்லைன் செயலிகளை முறைகேடாக பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற குற்ற செயல்களால் பாதிக்கப்படுபவர்கள் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையையோ, அருகில் உள்ள காவல் நிலையத்தையோ தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory