» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:47:21 AM (IST)

ராதாபுரம் கணபதி நகர் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு பிடித்தனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா அலுவலகம் அருகில் அமைந்துள்ள கணபதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கன். இவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் குழந்தைகளோடு படுத்து இருக்கும் போது பீரோவிற்கு அடியில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்துள்ளார். உடனே இது குறித்து ராதாபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பெயரில் வந்த தீயணைப்பு வீரர்கள் வீடு முழுவதும் தேடினர்.
இறுதியில் பீரோவுக்கு அடியில் சிக்கி இருந்த கொம்பேறி மூக்கனை பிடிக்க முயற்சித்த போது அது மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்றது. சாமர்த்தியமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் இடுக்கி மூலம் கிடுக்கிப்பிடி போட்டு பிடித்தனர். பின்பு பாம்பை பத்திரமாக மீட்டு பையில் போட்டு கொண்டு சென்றனர். இதில் ராதாபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வராஜன், தீயணைப்பு வீரர் கண்ணன் உட்பட தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். வீட்டில் இருந்த பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் நன்றியை தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் செயலிகள் மூலம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:57:36 PM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:53:27 PM (IST)

ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி எஸ்எம்எஸ்: அங்கன்வாடி பணியாளர் அதிர்ச்சி!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:25:46 PM (IST)

அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் வீடுபுகுந்து மிரட்டல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:42:06 PM (IST)

இப்போதாவது மனம் திருந்திய மத்திய அரசு : ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:19:10 PM (IST)

இபிஎஸ் முதுகில் குத்தியதாக நான் சொல்லவே இல்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:13:30 PM (IST)
