» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாலிபரை வெட்டிக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம்தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:18:18 AM (IST)
ராதாபுரம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூத்தன்குழி சுனாமி காலனியை சேர்ந்தவர் சிலுவை கித்தேரியான். இவரது மனைவி அந்தோணி வளன்அரசி. இந்த தம்பதியின் மகன் சிலுவை அன்றோ அபினேஷ் (20). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது கூத்தன்குழி மேற்கு தெருவை சேர்ந்த சாந்தகுரு மகன் சந்துரு (23), பாத்திமாநகரை சேர்ந்த ஜான்சன் மகன் ரேவந்த் (27), ஜெய ஆரோக்கியசெல்வம் மகன் பிரதீஷ் (23), சந்தியா மகன் நிக்கோலஸ் (23), அந்தோணிராஜ் மகன் டென்னிஸ் (29) ஆகியோர் சிலுவை அன்றோ அபினேசை வழிமறித்து தகராறு செய்தனர்.
அதன்பின்னர் சில நாட்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் சிலுவை அன்றோ அபினேஷ் வீட்டுக்கு சென்று அவரை தாக்கியுள்ளனர். இதனால் அவரது தாய் அந்தோணி வளன்அரசி கூடங்குளம் போலீசில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த சந்துரு, ரேவந்த், பிரதீஷ், நிக்கோலஸ், டென்னிஸ் மற்றும் சிறுவன் உள்பட 8 பேர் கடந்த 28.8.2021 அன்று சிலுவை அன்றோ அபினேசை ஓட ஓட விரட்டிச்சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
இதுகுறித்து சிறுவன் உள்பட 8 பேர் மீது கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதி கதிரவன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் குற்றம் சாட்டப்பட்ட சந்துரு, ரேவந்த், பிரதீஷ், நிக்கோலஸ், டென்னிஸ் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
அவர்களுடன் குற்றம் சாட்டப்பட்ட 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு நபர் சிறுவன் என்பதால் அவருக்கான வழக்கு விசாரணை தனியாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் காளிமுத்து ஆஜரானார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் செயலிகள் மூலம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:57:36 PM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:53:27 PM (IST)

ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி எஸ்எம்எஸ்: அங்கன்வாடி பணியாளர் அதிர்ச்சி!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:25:46 PM (IST)

அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் வீடுபுகுந்து மிரட்டல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:42:06 PM (IST)

இப்போதாவது மனம் திருந்திய மத்திய அரசு : ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:19:10 PM (IST)

இபிஎஸ் முதுகில் குத்தியதாக நான் சொல்லவே இல்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:13:30 PM (IST)
