» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருக்கோளூர் கோவில் ஆவணி திருவிழாவில் கருட சேவை: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 8:19:43 AM (IST)

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழாவையொட்டி நேற்று இரவு கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் சுவாமி வைத்தமாநிதி பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். இது நவதிருப்பதிகளில் 8-வது தலமாக விளங்குகிறது. ஆனமிக சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மாலை 6 மணிக்கு சுவாமி பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமன் வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நேற்று 5-ம்திருவிழாவையொட்டி நேற்று அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 7 மணிக்கு விஸ்வரூபம், காலை 7.30 மணிக்கு திருமஞ்சனமும், காலை 8.30 மணிக்கு நித்தியல் பூஜையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி வைத்தமாநிதி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இரவு 7.45 மணிக்கு சுவாமி கருட வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஸ்தலத்தார் திருவாய்மொழி பிள்ளை ஸ்ரீதரன் ஸ்வாமி, சடகோபன் சுவாமி, நிர்வாக அதிகாரி சதீஷ் உள்பட சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் செயலிகள் மூலம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:57:36 PM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:53:27 PM (IST)

ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி எஸ்எம்எஸ்: அங்கன்வாடி பணியாளர் அதிர்ச்சி!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:25:46 PM (IST)

அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் வீடுபுகுந்து மிரட்டல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:42:06 PM (IST)

இப்போதாவது மனம் திருந்திய மத்திய அரசு : ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:19:10 PM (IST)

இபிஎஸ் முதுகில் குத்தியதாக நான் சொல்லவே இல்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:13:30 PM (IST)
