» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுமியிடம் பாலியல் சீண்டல்: பள்ளிக் காவலாளி போக்ஸோவில் கைது

திங்கள் 25, ஆகஸ்ட் 2025 8:02:22 AM (IST)

கோவில்பட்டியில் 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளிக் காவலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த முத்தையா மகன் மாரியப்பன் (60). கோவில்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் காவலாளியாக உள்ள இவர், 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.

இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, மாரியப்பனை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory