» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் லாரி மீது கார் மோதி விபத்து: 2 குழந்தைகள், தம்பதியர் படுகாயம்!
ஞாயிறு 24, ஆகஸ்ட் 2025 7:32:31 PM (IST)

தூத்துக்குடியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம், மேகூர் பாவடி தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் குமார் (38), இவரது தனது மனைவி கோமதி (29), மகன்கள் ஆத்விக் (7), நிதர்சன் (6) ஆகியோருடன் ஈரோட்டில் இருந்து இன்று காலை சுமார் 7 மணியளவில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
தூத்துக்குடி - மதுரை பைபாஸ் வழியாக ஸ்டெர்லைட் பாலத்தையடுத்த ஜோதி நகர் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் இருந்த 4பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் 4பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் செயலிகள் மூலம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:57:36 PM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:53:27 PM (IST)

ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி எஸ்எம்எஸ்: அங்கன்வாடி பணியாளர் அதிர்ச்சி!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:25:46 PM (IST)

அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் வீடுபுகுந்து மிரட்டல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:42:06 PM (IST)

இப்போதாவது மனம் திருந்திய மத்திய அரசு : ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:19:10 PM (IST)

இபிஎஸ் முதுகில் குத்தியதாக நான் சொல்லவே இல்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:13:30 PM (IST)
