» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி ஐந்தினை பூங்காவில் கால்பந்து மைதானம் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
புதன் 12, பிப்ரவரி 2025 3:54:13 PM (IST)

தூத்துக்குடி ஐந்தினை பூங்காவில் கால்பந்து மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர்.
பின்னர் மேயர் பேசுகையில், தூத்துக்குடி மாநகரட்சியில் கடந்த காலங்களில் மழை நீர் தேங்கிய 400 காலி மனைப்பகுதிகளில் அதன் உரிமையாளர்க்ள மணல் நிரப்பி வருகின்றனர். இதுபோல் காலி மனைகளில் குப்பை கொட்டுவதும் குறைந்து வருகிறது. மாநகரில் உள்ள 8 ஆயிரம் சாலையோர கடைகள் மூலம் அதிகளவில் கேரி பைகள் புழங்குகிறது. இதனை தடுக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வியாபாரிகளும், பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
பி அன் டி காலனியில் புதிய பூங்கா அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் இளைப்பார சாலையோர பூங்காக்கள் அமைக்கப்படும். பாளை., ரோட்டில் உள்ள ஐந்தினை பூங்காவில் கால்பந்து மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். கூட்டத்தில் மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளம்துறையில் ரூ.26 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுக வளர்ச்சி பணிகள்: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 5:10:18 PM (IST)

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி: பாடக்குறிப்புகள், மாதிரி தேர்வுகள் இணையதளத்தில் பதிவேற்றம்
வியாழன் 13, மார்ச் 2025 4:47:14 PM (IST)

சுகாதாரத்துறையில் 20 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 13, மார்ச் 2025 3:53:07 PM (IST)

கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வியாழன் 13, மார்ச் 2025 3:45:22 PM (IST)

இராஜாக்கமங்கலம் ஊராட்சியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 12:28:02 PM (IST)

குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா; அலறியடித்து ஓடிய பொதுமக்கள்: நாகர்கோவிலில் பரபரப்பு
புதன் 12, மார்ச் 2025 8:23:12 PM (IST)

தூத்துக்குடிFeb 12, 2025 - 08:58:34 PM | Posted IP 172.7*****