» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் குட்கா கடத்திய வாலிபர் கைது: ரூ.3½ லட்சம் பணம் பறிமுதல்!
புதன் 12, பிப்ரவரி 2025 8:12:28 AM (IST)

தூத்துக்குடியில் மொபட்டில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 கிலோ புகையிலை மற்றும் ரூ.3½ லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த மொபட்டில் வந்த வாலிபரை தடுத்துநிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மொபட்டில் இருந்த 3 சாக்குப்பைகளை சோதனை செய்தனர்.
அப்போது அதில், 40 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததும், அவற்றை அவர் கடத்தி சென்றதும் தெரியவந்தது. மேலும், ஒரு சாக்குப்பையில் ரூ.3½ லட்சம் பணமும் இருந்தது. அந்த பணத்தையும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தொடர் விசாரணை நடத்தினர்.
இதில் அவர், முத்தம்மாள் காலனியை சேர்ந்த முருகையா மகன் வயனபெருமாள் (37) என்பதும், அவற்றை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அவர், கடைகளில் விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரையும், பறிமுதல் செய்த பணம், புகையிலை பொருட்களை சிப்காட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளம்துறையில் ரூ.26 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுக வளர்ச்சி பணிகள்: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 5:10:18 PM (IST)

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி: பாடக்குறிப்புகள், மாதிரி தேர்வுகள் இணையதளத்தில் பதிவேற்றம்
வியாழன் 13, மார்ச் 2025 4:47:14 PM (IST)

சுகாதாரத்துறையில் 20 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 13, மார்ச் 2025 3:53:07 PM (IST)

கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வியாழன் 13, மார்ச் 2025 3:45:22 PM (IST)

இராஜாக்கமங்கலம் ஊராட்சியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 12:28:02 PM (IST)

குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா; அலறியடித்து ஓடிய பொதுமக்கள்: நாகர்கோவிலில் பரபரப்பு
புதன் 12, மார்ச் 2025 8:23:12 PM (IST)

சண்முகராஜ்Feb 13, 2025 - 04:28:06 PM | Posted IP 172.7*****