» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் நடைபாதையில் உள்ள கடையை அகற்ற வேண்டும்: ஆட்சியரிடம் கோரிக்கை!!
திங்கள் 10, பிப்ரவரி 2025 3:35:05 PM (IST)
தூத்துக்குடியில் நடைபாதையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடையை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக ஜின் பேக்டரி சாலையைச் சேர்ந்த வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி ஜின் பேக்டரி சாலையில் சுகம் ஹோட்டல் எதிர்புறம் பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட வியாபாரிகள் டீக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை பகுதியில் கட்டிட தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் வேலைக்கு செல்வதற்காக கூடுவர்.
இந்நிலையில் வியாபாரிகளை பாதிக்கும் வகையிலும் நடைபாதையில் மாநகராட்சி நிர்வாகமே ஆக்கிரமிப்பை உருவாக்கும் வகையில் அந்தப் பகுதியில் தனிநபர் ஒருவருக்கு கடை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அனுமதி வழங்கி உள்ள கடை அருகே உயர் மின்னழுத்த ட்ரான்ஸ்பார்ம் அமைந்துள்ள பகுதி அருகே அமைந்துள்ளது இதன் காரணமாக மின் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த கடை மூலம் தங்களது வியாபாரம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். விதிமுறைகளை மீறி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தனிநபருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கடையை அகற்ற மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளம்துறையில் ரூ.26 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுக வளர்ச்சி பணிகள்: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 5:10:18 PM (IST)

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி: பாடக்குறிப்புகள், மாதிரி தேர்வுகள் இணையதளத்தில் பதிவேற்றம்
வியாழன் 13, மார்ச் 2025 4:47:14 PM (IST)

சுகாதாரத்துறையில் 20 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 13, மார்ச் 2025 3:53:07 PM (IST)

கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வியாழன் 13, மார்ச் 2025 3:45:22 PM (IST)

இராஜாக்கமங்கலம் ஊராட்சியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 12:28:02 PM (IST)

குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா; அலறியடித்து ஓடிய பொதுமக்கள்: நாகர்கோவிலில் பரபரப்பு
புதன் 12, மார்ச் 2025 8:23:12 PM (IST)

tuticorianFeb 10, 2025 - 11:15:11 PM | Posted IP 172.7*****