» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாநகராட்சியுடன் முள்ளக்காடு ஊராட்சியை இணைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 21, ஜனவரி 2025 8:48:26 PM (IST)

முள்ளக்காடு ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியுடன் முள்ளக்காடு ஊராட்சியை இணைப்பதை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி முன்னாள் தலைவர் கோபிநாத் நிர்மல் கூறுகையில், "தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள முள்ளக்காடு ஊராட்சியில் உப்பளம் விவசாயம் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யக்கூடிய தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இங்கே மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி தலைவரின் கீழ் சிறப்பான நிர்வாகம் நடைபெற்று, சாலை குடிநீர் பெருவிளக்கு வடிகால் வசதிகள் உட்பட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே ஊராட்சி மக்களின் விருப்பத்திற்கு மாறாக மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவுக்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் உடனடியாக ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை மீறி தூத்துக்குடி மாநகராட்சியுடன் முள்ளக்காடு ஊராட்சியை இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம் அதனை வெளிப்படுத்தும் வகையில் இன்று ஊராட்சி அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் முள்ளக்காடு ஊர் கோவில் தர்மகர்த்தாக்கள் சேகர், ரகுபதி என்ற சின்னராஜ், ஊராட்சி முன்னாள் தலைவர் கோபிநாத் நிர்மல், பொட்டல் காடு ஊர் தலைவர் ஜெய கிருஷ்ணன், செயலாளர் திவாகர், பொருளாளர் முத்துராஜ், உப்பு உற்பத்தியாளர் சிவாகர், காமராஜர் இளைஞர் சங்க தலைவர் கோகுல், வக்கீல் பாஸ்கர், திமுகவைச் சேர்ந்த சில்வர் சிவா, அதிமுக செயலாளர் ஸ்ரீராம், கணேசன் கம்யூனிஸ்ட் கட்சி மகாராஜன், நாம் தமிழர் கட்சி ஆனந்த், பால்ராஜ்,முள்ளக்காடு பொட்டல்காடு ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை..!
சனி 15, பிப்ரவரி 2025 5:44:14 PM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை : நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
சனி 15, பிப்ரவரி 2025 3:42:45 PM (IST)

கனிமவளங்களை கடத்த அரசே அனுமதி அளிப்பதா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
சனி 15, பிப்ரவரி 2025 11:57:45 AM (IST)

கோழிக்கோடு சி.எஸ்.ஐ. தமிழ் ஆலய பிரதிஷ்டை விழா: குமரிப் பேராயர் செல்லையா பங்கேற்பு!
சனி 15, பிப்ரவரி 2025 8:32:14 AM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் விடுதலை!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:48:59 PM (IST)

நாகர்கோவிலில் பிப்.19ம் தேதி 6வது புத்தகத் திருவிழா தொடக்கம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 13, பிப்ரவரி 2025 3:53:01 PM (IST)

AnnamalaiJan 22, 2025 - 01:05:38 PM | Posted IP 162.1*****