» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மேலப்பெருவிளை புனித சலேத் அன்னை கெபி திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்

ஞாயிறு 2, பிப்ரவரி 2025 9:06:56 PM (IST)

ஆசாரிபள்ளம் அருகே மேலப்பெருவிளை புனித சலேத் அன்னை கெபியில் வருடாந்திர திருவிழா திருப்பலி கோலாகலமாக நடந்தது. 

குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அடுத்த மேலப் பெருவிளை புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பாவிகளுக்கு அடைக்கலமான புனித சலேத் அன்னை கெபி உள்ளது. இந்தக் கெபியில் வருடம் தோறும் வருடாந்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா வானது கடந்த மாதம் ஜனவரி 31-ஆம் தேதி வெள்ளிகிழமை தொடங்கிங்கியது. பிப்.1, 2, ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் அன்னையின் சொரூபம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றது. 

மூன்றாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் தேர் பவனி நடை பெற்றது. அதனை தொடர்ந்து கஞ்ஜி விருந்தும் நடைபெற்றது. மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த சலேத் தன்னை கெவியில் ஒவ்வொரு மாதமும் 19-ஆம் தேதி சிறப்பு ஜெப வழிபாடு, ஆடம்பர கூட்டுத் திருப்பலி, நற்கருணை ஆசீர்வாதமும் அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்பின் உணவு விருந்தும் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory