» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மேலப்பெருவிளை புனித சலேத் அன்னை கெபி திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
ஞாயிறு 2, பிப்ரவரி 2025 9:06:56 PM (IST)
ஆசாரிபள்ளம் அருகே மேலப்பெருவிளை புனித சலேத் அன்னை கெபியில் வருடாந்திர திருவிழா திருப்பலி கோலாகலமாக நடந்தது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அடுத்த மேலப் பெருவிளை புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பாவிகளுக்கு அடைக்கலமான புனித சலேத் அன்னை கெபி உள்ளது. இந்தக் கெபியில் வருடம் தோறும் வருடாந்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா வானது கடந்த மாதம் ஜனவரி 31-ஆம் தேதி வெள்ளிகிழமை தொடங்கிங்கியது. பிப்.1, 2, ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் அன்னையின் சொரூபம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றது.
மூன்றாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் தேர் பவனி நடை பெற்றது. அதனை தொடர்ந்து கஞ்ஜி விருந்தும் நடைபெற்றது. மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த சலேத் தன்னை கெவியில் ஒவ்வொரு மாதமும் 19-ஆம் தேதி சிறப்பு ஜெப வழிபாடு, ஆடம்பர கூட்டுத் திருப்பலி, நற்கருணை ஆசீர்வாதமும் அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்பின் உணவு விருந்தும் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:05:39 PM (IST)

பைக் விபத்தில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு: குளச்சல் அருகே சோகம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:58:56 PM (IST)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 நேரடி சேர்க்கை: அக்.17 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:03:48 PM (IST)

தேசிய சுகாதார திட்டத்தில் 18 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:42:34 AM (IST)

கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும் முயற்சி: தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் பலி!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:35:02 AM (IST)

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்: ஒரே நாளில் 24 வாகனங்கள் பறிமுதல்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:59:11 PM (IST)
