» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மேலப்பெருவிளை புனித சலேத் அன்னை கெபி திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
ஞாயிறு 2, பிப்ரவரி 2025 9:06:56 PM (IST)
ஆசாரிபள்ளம் அருகே மேலப்பெருவிளை புனித சலேத் அன்னை கெபியில் வருடாந்திர திருவிழா திருப்பலி கோலாகலமாக நடந்தது.
குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அடுத்த மேலப் பெருவிளை புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பாவிகளுக்கு அடைக்கலமான புனித சலேத் அன்னை கெபி உள்ளது. இந்தக் கெபியில் வருடம் தோறும் வருடாந்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா வானது கடந்த மாதம் ஜனவரி 31-ஆம் தேதி வெள்ளிகிழமை தொடங்கிங்கியது. பிப்.1, 2, ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் அன்னையின் சொரூபம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றது.
மூன்றாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் தேர் பவனி நடை பெற்றது. அதனை தொடர்ந்து கஞ்ஜி விருந்தும் நடைபெற்றது. மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த சலேத் தன்னை கெவியில் ஒவ்வொரு மாதமும் 19-ஆம் தேதி சிறப்பு ஜெப வழிபாடு, ஆடம்பர கூட்டுத் திருப்பலி, நற்கருணை ஆசீர்வாதமும் அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்பின் உணவு விருந்தும் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்தவ ஆலயத்தில் இரு தப்பினர் மோதல்: தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:40:33 PM (IST)

விபத்தில்லா குமரி: லாரி ஓட்டுநர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு
சனி 6, டிசம்பர் 2025 4:59:02 PM (IST)

குமரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள்: ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!
சனி 6, டிசம்பர் 2025 4:11:06 PM (IST)

கன்னியாகுமரி புதிய பேராயராக கிறிஸ்டோபர் விஜயன் தேர்வு: நாளை பதவியேற்பு விழா
சனி 6, டிசம்பர் 2025 3:51:18 PM (IST)

குமரி சுற்றுலாத்தளத்தில் போலி பார்க்கிங் ரசீது தயாரித்து பணம் வசூல் - 2பேர் கைது!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:25:06 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:24:13 PM (IST)


.gif)