» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் ஆட்சி அமைக்க அழைக்க வலியுறுத்தல்: த.வெ.க பெண் நிர்வாகிகள் உண்ணாவிரதம்!

வெள்ளி 8, மே 2026 12:05:34 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி, திண்டுக்கல்லில் அக்கட்சியின் நிர்வாகிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், திருச்சி சாலை கல்லறை மேடு அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் சரண்யா தலைமையில், வளர்மதி மற்றும் அகஸ்தியா ஆகியோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு 15 நாட்கள் அவகாசம் (கெடு) வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory