» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:25:13 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று பகல் முழுக்க மழை நீடித்தது. திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்துக் கொட்டியதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழையளவு (மி.மீட்டரில்): குருந்தன்கோடு 38, பாலமோர் 31.4, நாகர்கோவில் மற்றும் பூதப்பாண்டி தலா 30.2, குளச்சல் - 26, கொட்டாரம் 25.6, ஆரல்வாய்மொழி 24, தக்கலை 23.4, திற்பரப்பு - 21.2, சிற்றாறு-2 - 18.4, புத்தன் அணை மற்றும் சுருளக் கோடு - 17.2, பெருஞ்சாணி 15.8, சிற்றாறு-1, பேச்சிப்பாறை, களியல் மற்றும் கோயில்போர்விளை தலா 14.2, முள்ளங்கினாவிளை மற்றும் குழித்துறை 13.8, மைலாடி 13.2, முக்கடல் அணை 12.3, அடையாமடை 10.4 மி.மீ. மழை பதிவானது. மொத்தம் 505.9 மி.மீ. மழை பதிவானது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 40.14 அடியாக உயர்ந்தது. 560 கன அடி தண்ணீர் வருகிறது. 361 கன அடி திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 59.53 அடியாக உள்ளது. 579 கன அடி தண்ணீர் வருகிறது. 285 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. சிற்றாறு-1 அணையில் நீர்மட்டம் 5.41 அடியாக உள்ளது. 140 கன அடி தண்ணீர் வருகிறது. 175 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்துக் கொட்டியதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடியிருப்பு பகுதிக்கு வந்த மலைப்பாம்பு : பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
வியாழன் 16, அக்டோபர் 2025 8:07:39 PM (IST)

புனித தேவசகாயம் திருத்தலத்தில் இன்று நன்றி திருப்பலி : ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு
புதன் 15, அக்டோபர் 2025 8:06:41 PM (IST)

நாகர்கோவிலில் 17ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
புதன் 15, அக்டோபர் 2025 4:32:26 PM (IST)

தீபாவளியை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
புதன் 15, அக்டோபர் 2025 3:27:24 PM (IST)

காவல்துறை ரோந்து வாகனம் மீது திமுக நகர செயலாளர் கார் மோதல் - 6பேர் காயம்!
புதன் 15, அக்டோபர் 2025 3:20:24 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:05:39 PM (IST)
