» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தீபாவளியை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
புதன் 15, அக்டோபர் 2025 3:27:24 PM (IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே கூடுதலாக சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க பின்வரும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்:-
சென்னை சென்ட்ரல் - போத்தனூர்
(வண்டி எண்: 06049/06050): சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரவு 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் போத்தனூரில் இருந்து அக்டோபர் 18-ம் தேதி மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரவு 11.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
மேலும், போத்தனூரில் இருந்து (வண்டி எண்: 06100 ) அக்டோபர் 21-ம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை வந்தடையும்.
தாம்பரம் - கன்னியாகுமரி:
(வண்டி எண்: 06133): தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் 1.25 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்றடையும்.
கன்னியாகுமரி-செங்கல்பட்டு
(வண்டி எண்: 06134): கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 17-ம் தேதி மதியம் 3.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு வந்துசேரும்.இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மதியம் 2.15 முதல் தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புனித தேவசகாயம் திருத்தலத்தில் இன்று நன்றி திருப்பலி : ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு
புதன் 15, அக்டோபர் 2025 8:06:41 PM (IST)

நாகர்கோவிலில் 17ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
புதன் 15, அக்டோபர் 2025 4:32:26 PM (IST)

காவல்துறை ரோந்து வாகனம் மீது திமுக நகர செயலாளர் கார் மோதல் - 6பேர் காயம்!
புதன் 15, அக்டோபர் 2025 3:20:24 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:05:39 PM (IST)

பைக் விபத்தில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு: குளச்சல் அருகே சோகம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:58:56 PM (IST)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 நேரடி சேர்க்கை: அக்.17 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:03:48 PM (IST)
