» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குடியிருப்பு பகுதிக்கு வந்த மலைப்பாம்பு : பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
வியாழன் 16, அக்டோபர் 2025 8:07:39 PM (IST)

தாழக்குடி அருகே கோழியை பிடிப்பதற்காக குடியிருப்பு அருகில் வந்த 7 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தாழக்குடி பேரூராட்சிகுட்பட்ட 1-வது வார்டு சீதப்பால் பகுதியில் கேபிள் டிவி நடத்தி வரும் ராஜேஷ் என்பவர் வீட்டின் அருகில் உள்ள தோப்பில் வாத்து கோழிகள் இறை தேடி வருகின்றன அதனை பிடிப்பதற்காக வந்த சுமார் 7 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு அதன் அருகில் உள்ள வலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது
இதனைப் பார்த்த ராஜேஷ் தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் கவுன்சிலர் ரோகினிஅய்யப்பன் அவர்களுக்கு தகவல் கொடுத்தார் அவர் மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார் அதன் அடிப்படையில் பூதப்பாண்டி வனச்சரகர் அன்பழகன் உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர் அந்தோணிராஜன் விரைந்து வந்து வலையில் சிக்கிய மலைப்பாம்பினை பத்திரமாக பிடித்து அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர் இதனால் வீட்டில் உள்ளவர்கள் நிம்மதி அடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி: வாலிபர் கைது!!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:51:56 PM (IST)

நிதி நிறுவனத்தில் போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சம் கையாடல்: பெண் மேலாளர் சிக்கினார்
திங்கள் 1, டிசம்பர் 2025 8:46:21 PM (IST)

பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமம் ஏலம் : டிச.10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 4:03:58 PM (IST)

திற்பரப்பு அருவியில் குளிக்க 7 நாள்களுக்குப் பிறகு அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
ஞாயிறு 30, நவம்பர் 2025 10:34:28 AM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் முழுஉடல் பரிசோதனை முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 29, நவம்பர் 2025 5:02:37 PM (IST)

குமரி பகவதி அம்மன் கோவில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1.65 லட்சம் வருவாய்!
வெள்ளி 28, நவம்பர் 2025 10:42:22 AM (IST)


.gif)