» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

பாளையங்கோட்டை முத்தூர் ஊராட்சியில் சிட்கோ புதிய தொழில் பேட்டையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், முத்தூர் ஊராட்சியில் சிட்கோ புதிய தொழில் பேட்டையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, சிட்கோ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்பித்தார்கள்.
பாளையங்கோட்டை வட்டம், முத்தூர் கிராமத்தில் 33.35 ஏக்கர் நிலத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் புதிய தொழிற்பேட்டையாக உருவாக்கம் செய்திட மேற்படி நிலத்திற்கு நிலமதிப்பு செலுத்தப்பட்டு 05.10.2023 அன்று சிட்கோ மூலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால் சுமார் 1400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மேற்கண்ட தொழிற்பேட்டையில் மொத்தம் 99 தொழில்மனைகள் ரூ.958 இலட்சம் செலவில் மேம்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக 24.37 ஏக்கரில், 1.91 கோடி மதிப்பீட்டில், 67 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் தருவாயில் உள்ளது. சிட்கோ தொழிற்பேட்டை இப்பகுதியில் அமைவதன் மூலம் இப்பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், தொழில்முனைவோர்களாக மாறுவதற்கான வாய்ப்புகளும் அதிகளவில் உள்ளது.
இந்நிகழ்ச்சியில், சிட்கோ கிளை மேலாளர் கலாவதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கனகராஜ், உதவி செயற்பொறியாளர் சந்திரன், முத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுடலைகண்ணு, முக்கிய பிரமுகர் போர்வெல் கணேசன், சுபாஷ் தங்கபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
