» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குலசை தசரா பக்தர்களுக்கு திமுக பிரமுகர் இடையூறு - ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 3:12:08 PM (IST)

ஆறுமுகநேரியில் தசரா பிறை அமைக்க விடாமல் திமுக பிரமுகர் இடையூறு ஏற்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குலசை தசரா பக்தர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக அந்த பகுதியில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலய தசரா திருவிழாவிற்காக விரதம் இருந்து பல்வேறு வேடங்கள் அணிந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இவ்வாறு விரதம் இருக்கும் பக்தர்கள் தசரா காலங்களில் வீட்டில் தங்காமல் வெளியே தசரா பிறை அமைத்து அதில் தங்கி வழிபாடு நடத்துவார்கள்.
இந்த ஆண்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஓம் ஸ்ரீ முத்தாரம்மன் தசரா குழு சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் தசரா பிறை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே அந்த பகுதியைச் சேர்ந்த ஊர் தலைவரும் திமுகவை சேர்ந்தவருமான ஜானகிராமன் என்பவர் ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் தான் ஆதரவு அளித்த திமுகவை சேர்ந்த நபருக்கு ஆதரவளிக்காமல் அதிமுகவை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு ஆதரவு தெரிவித்து அவர் கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் ஜானகிராமன் உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு தசரா குழுவினர் அந்தப் பகுதியில் தசரா பிறை அமைக்க கூடாது என காவல்துறை துணையுடன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக அந்த பகுதியில் மாலை அணிந்து விரதம் இருந்து வரும் பக்தர்கள் தாங்கள் வழிபாடு நடத்த முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு தங்களுக்கு தங்களது தசரா குழுவினர் வழிபட தசரா பிறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

AahaanSep 15, 2025 - 09:01:34 PM | Posted IP 104.2*****