» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5பேர் கைது 1.100 கிலோ கஞ்சா பறிமுதல்!
திங்கள் 19, மே 2025 5:11:25 PM (IST)

ஈத்தாமொழி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
குமரி மாவட்டத்தில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் கஞ்சா, காவல்துறையினர் குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஈத்தாமொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் 1.100 கிலோ கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஈத்தாமொழி தர்மபுரம் பகுதியை சேர்ந்த ராஜகுமார் மகன் அபிராம் குமார்(20), மங்காவிளை பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் கபின்(25), கோட்டார் வடலிவிளை பகுதியை சேர்ந்த மணி மகன் சுரேஷ்(29), இடலாக்குடி அச்சன் கிணறு தெருவை சேர்ந்த மாஹின் அபூபக்கர் மகன் முகமது ஷாபி(31), இரணியல் சுயம்பு மகன் அபினேஷ்(29) ஆகிய 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் படகு ஓட்டுநர் பயிற்சி தொடக்கம்!
வெள்ளி 23, மே 2025 5:52:30 PM (IST)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 23, மே 2025 5:18:23 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை : போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 23, மே 2025 12:39:23 PM (IST)

குமரி பகவதியம்மன் கோயில் வைகாசித் திருவிழா: கால்நாட்டு விழா
வெள்ளி 23, மே 2025 12:36:55 PM (IST)

ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வுக்கு அபராதம்
வெள்ளி 23, மே 2025 12:01:43 PM (IST)

கொடை விழா தகராறில் இட்லி கடைக்காரா் கைது : காவல் நிலையத்தில் உறவினா்கள் முற்றுகை!
வியாழன் 22, மே 2025 8:34:20 AM (IST)
