» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொடை விழா தகராறில் இட்லி கடைக்காரா் கைது : காவல் நிலையத்தில் உறவினா்கள் முற்றுகை!

வியாழன் 22, மே 2025 8:34:20 AM (IST)

தூத்துக்குடியில் போலீசார் கைது செய்தவரை விடுவிக்கக் கோரி அவரது உறவினா்கள் தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி அண்ணாநகரை சோ்ந்தவா் கண்ணன். இவா் இட்லி கடை நடத்தி வருகிறாா். இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அமுதாநகா் பகுதியில் நடந்த கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் இசக்கிராம் என்பவரை கண்ணன் உள்ளிட்டோா் சோ்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை நேற்று முன்தினம் இரவு கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனா். இது குறித்து தகவலறிந்த கண்ணனின் உறவினா்கள் சுமாா் 50க்கும் மேற்பட்டோா் தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். 

அப்போது அவா்கள், கண்ணன் தற்போது திருந்தி வாழ்ந்து வருவதாகவும், அவா் மீது போலீசார் வேண்டுமென்றே வழக்கு போடுவதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து கண்ணனை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்ல முற்பட்ட போது, போலீஸ் ஜீப்பின் முன்பு அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். 

தொடா்ந்து போலீசார் அவா்களை அப்புறப்படுத்த முயன்ற போது, போலீசாருக்கும், கண்ணனின் உறவினா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து போலீசார் அவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு அவா்களை அப்புறப்படுத்தினா். மேலும், கண்ணனை மருத்துவ பரிசோதனைக்குப் பின்னா், நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory