» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி கடலில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
புதன் 21, மே 2025 4:43:23 PM (IST)

சர்வதேச சுற்றுலா நகரமான கன்னியாகுமரி கடலில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச சுற்றுலா நகரமான கன்னியாகுமரியில் உள்ள கடலில் சமீப காலமாக சாக்கடை நீர் கலப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்து வருகிறது. இதனால்பொது மக்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சுமார் 25,000 பேர் வசிக்கும் இந்த பகுதியில் வீடுகள், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட வைகளில் இருந்து வெளி யேறும் சாக்கடை நீர் எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக கடலில் கலக்கிறது.
இந்த சாக்கடையுடன் மனித கழிவுகளும் கலந்து கடலை மாசுபடுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் புகார். கடலில் கலக்கும் சாக்கடை நீரால் மக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு உள்ளாகி வருவதால் உடனடியாக கழிவுகள் கடலில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் படகு ஓட்டுநர் பயிற்சி தொடக்கம்!
வெள்ளி 23, மே 2025 5:52:30 PM (IST)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 23, மே 2025 5:18:23 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை : போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 23, மே 2025 12:39:23 PM (IST)

குமரி பகவதியம்மன் கோயில் வைகாசித் திருவிழா: கால்நாட்டு விழா
வெள்ளி 23, மே 2025 12:36:55 PM (IST)

ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வுக்கு அபராதம்
வெள்ளி 23, மே 2025 12:01:43 PM (IST)

கொடை விழா தகராறில் இட்லி கடைக்காரா் கைது : காவல் நிலையத்தில் உறவினா்கள் முற்றுகை!
வியாழன் 22, மே 2025 8:34:20 AM (IST)
