» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 23, மே 2025 5:18:23 PM (IST)
SMRV அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மே 19 முதல் ஜூன் 13ம் தேதி வரை வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி (ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவு மட்டும்) மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் குறைந்தபட்ச வயது வரம்பு 15 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
தகுதிவாய்ந்த மாணவிகள் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளான 1.)கம்மியர் மின்னணுவியல் , 2). டெஸ்க் டாப் பப்பிளிசிங் ஆப்ரேட்டர், 3). கம்யுட்டர் ஆப்ரேட்டர் மற்றும் புரோகிராம் அசிஸ்டெண்ட். 4). ஆடை தயாரித்தல், 5). சுருக்கெழுத்து மற்றும் செயலக பணி உதவியாளர்(ஆங்கிலம்), 6) நவீன ஆடை வடிவமைப்பு தொழிற்நுட்பம், 7). மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளர், 8). கட்டிடக்கலை படவரைவாளர் ஆகிய தொழிற்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம்.
மாணவிகள் தொழிற்கல்வி சேர்க்கை 19.05.2025 முதல் 13.06.2025 வரை SMRV அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), வேப்பமூடு ஜங்சன் அருகில், நாகர்கோவில் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் மிதிவண்டி, சீருடை தையல்கூலியுடன், பாடபுத்தகங்கள், காலணி, மாதந்தோறும் வருகைக்கேற்ப ரூ.750 உதவித்தொகை மற்றும் கட்டணமில்லா பேருந்து சலுகை வழங்கப்படும். மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கி பயிற்சி பெற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். தமிழக அரசு வழங்கும் உயர் கல்வி உதவித்தொகை ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி (தமிழ்வழிமட்டும்) பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை கூடுதலாக வழங்கப்படும்.
மேலும் தொழிற்பிரிவில் படிக்கும் போதே பிரபல தொழிற்நிறுவனங்களில் Internship Training உதவி தொகையுடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடு செய்து தரப்படும். 10 ஆம் வகுப்பு முடித்த பின்னர் 2 ஆண்டுகள் ஐடிஐ பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் மொழிப்பாடங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மட்டும் எழுதி 12 ஆம் வகுப்பு இணையான மாநில அரசு சான்றிதழ் பெறலாம்.
SMRV அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேர்ந்து மாணவிகள் பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு 9499055807,04652-222569, 9688333469, 9095680040, என்ற கைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்.19.05.2025 முதல் 13.06.2025 வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50/--ஐ விண்ணப்பதாரர் Debit Card / Credit card / Net Banking / Google Pay வாயிலாக செலுத்தலாம். இந்நிலையத்திற்கு நேரில் வரும் விண்ணப்பத்தாரர்களுக்கு இலவசமாக விண்ணப்பித்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் படகு ஓட்டுநர் பயிற்சி தொடக்கம்!
வெள்ளி 23, மே 2025 5:52:30 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை : போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 23, மே 2025 12:39:23 PM (IST)

குமரி பகவதியம்மன் கோயில் வைகாசித் திருவிழா: கால்நாட்டு விழா
வெள்ளி 23, மே 2025 12:36:55 PM (IST)

ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வுக்கு அபராதம்
வெள்ளி 23, மே 2025 12:01:43 PM (IST)

கொடை விழா தகராறில் இட்லி கடைக்காரா் கைது : காவல் நிலையத்தில் உறவினா்கள் முற்றுகை!
வியாழன் 22, மே 2025 8:34:20 AM (IST)

குமரி கடலில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
புதன் 21, மே 2025 4:43:23 PM (IST)
