» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழக எம்.பிக்கள் குறித்து மத்திய அமைச்சர் அவதூறு பேச்சு: விஜய் வசந்த் எம்.பி கண்டனம்!
திங்கள் 10, மார்ச் 2025 8:04:48 PM (IST)
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் குறித்து அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தியுள்ளார்.

இன்று மக்களவையில் புதிய கல்வி கொள்கை குறித்து நடந்த விவாதத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறினார். மேலும் தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து பாராளுமன்ற சபை என்று கூட பாராமல் அவதூறுகளை கூறினார். ஒரு மத்திய அமைச்சருக்கு இது ஒருபோதும் பொருந்தாத ஒன்று.
அவரது சொற்கள் தமிழகத்தின் வாக்காளர்கள் மீதான தாக்குதல். தமிழ்நாடு மீது மத்திய அரசு கொண்டுள்ள பாரபட்சமான நிலைப்பாடு மீண்டும் தெரிய வந்துள்ளது. அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் பிரதமர் திரு தர்மேந்திர பிரதான் அவர்களை அமைச்சரவிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும். சபாநாயகர் தமிழக மக்களுக்கு எதிராக அமைச்சர் கூறிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு!
புதன் 12, மார்ச் 2025 3:38:27 PM (IST)

பைக்குகள் மோதி விபத்து: ஜவுளிகடை உரிமையாளர் சாவு
செவ்வாய் 11, மார்ச் 2025 7:57:26 PM (IST)

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
செவ்வாய் 11, மார்ச் 2025 7:54:35 PM (IST)

வாகனங்களை சேதப்படுத்தி, வேன் டிரைவருக்கு அரிவாள் வெட்டு: மர்ம கும்பல் வெறிச்செயல்!
செவ்வாய் 11, மார்ச் 2025 7:44:33 PM (IST)

கன்னியாகுமரியில் விமான நிலையம் : பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை
செவ்வாய் 11, மார்ச் 2025 5:49:51 PM (IST)

ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் பணம் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:47:57 PM (IST)
