» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் பணம் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:47:57 PM (IST)
மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியின் கைப்பையில் இருந்த பணம் மற்றும் காசோலையை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம், களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் பிள்ளை மனைவி சுகன்யா குமாரி (75). இவா், மாா்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளைக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததாம். இதை பயன்படுத்திக் கொண்ட மா்மநபா் சுகன்யா குமாரி வைத்திருந்த கைப்பையை திருடிச் சென்றுள்ளாா். அதில் ரூ.85 ஆயிரம் மற்றும் வங்கி காசோலைகள் இருந்ததாம்.
இதுகுறித்து சுகன்யா குமாரி அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிந்து, பணம் மற்றும் காசோலையை திருடிச் சென்ற மா்ம நபரை தேடி வருகிறாா்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு மையம் தொடக்கம்: ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
சனி 6, ஜூன் 2026 12:30:28 PM (IST)

மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்: ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:51:36 PM (IST)

ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் சாதனை!
வியாழன் 4, ஜூன் 2026 12:44:31 PM (IST)

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)


