» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் பணம் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:47:57 PM (IST)
மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியின் கைப்பையில் இருந்த பணம் மற்றும் காசோலையை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம், களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் பிள்ளை மனைவி சுகன்யா குமாரி (75). இவா், மாா்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளைக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததாம். இதை பயன்படுத்திக் கொண்ட மா்மநபா் சுகன்யா குமாரி வைத்திருந்த கைப்பையை திருடிச் சென்றுள்ளாா். அதில் ரூ.85 ஆயிரம் மற்றும் வங்கி காசோலைகள் இருந்ததாம்.
இதுகுறித்து சுகன்யா குமாரி அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிந்து, பணம் மற்றும் காசோலையை திருடிச் சென்ற மா்ம நபரை தேடி வருகிறாா்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிருஷ்ணன்கோவில் நியாயவிலைக்கடையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு
புதன் 19, மார்ச் 2025 5:07:27 PM (IST)

வேலைவாய்ப்புகளை பெருக்க தவறிய மத்திய அரசு: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி பேச்சு
புதன் 19, மார்ச் 2025 4:14:06 PM (IST)

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக பணிகள் விரைவில் துவங்கும்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:49:03 PM (IST)

கன்னியாகுமரியில் மும்பை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்
செவ்வாய் 18, மார்ச் 2025 11:49:32 AM (IST)

ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:35:02 AM (IST)

நாகர்கோவிலில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் இயக்கம் : தெற்கு ரயில்வே தகவல்!
செவ்வாய் 18, மார்ச் 2025 11:03:29 AM (IST)
