» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் பணம் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:47:57 PM (IST)
மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியின் கைப்பையில் இருந்த பணம் மற்றும் காசோலையை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம், களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் பிள்ளை மனைவி சுகன்யா குமாரி (75). இவா், மாா்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளைக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததாம். இதை பயன்படுத்திக் கொண்ட மா்மநபா் சுகன்யா குமாரி வைத்திருந்த கைப்பையை திருடிச் சென்றுள்ளாா். அதில் ரூ.85 ஆயிரம் மற்றும் வங்கி காசோலைகள் இருந்ததாம்.
இதுகுறித்து சுகன்யா குமாரி அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிந்து, பணம் மற்றும் காசோலையை திருடிச் சென்ற மா்ம நபரை தேடி வருகிறாா்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு!
புதன் 12, மார்ச் 2025 3:38:27 PM (IST)

பைக்குகள் மோதி விபத்து: ஜவுளிகடை உரிமையாளர் சாவு
செவ்வாய் 11, மார்ச் 2025 7:57:26 PM (IST)

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
செவ்வாய் 11, மார்ச் 2025 7:54:35 PM (IST)

வாகனங்களை சேதப்படுத்தி, வேன் டிரைவருக்கு அரிவாள் வெட்டு: மர்ம கும்பல் வெறிச்செயல்!
செவ்வாய் 11, மார்ச் 2025 7:44:33 PM (IST)

கன்னியாகுமரியில் விமான நிலையம் : பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை
செவ்வாய் 11, மார்ச் 2025 5:49:51 PM (IST)

புனேயில் இருந்து கன்னியாகுமரிக்கு கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்!!
செவ்வாய் 11, மார்ச் 2025 10:28:59 AM (IST)
