» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வாகனங்களை சேதப்படுத்தி, வேன் டிரைவருக்கு அரிவாள் வெட்டு: மர்ம கும்பல் வெறிச்செயல்!
செவ்வாய் 11, மார்ச் 2025 7:44:33 PM (IST)
கோவில்பட்டியில் நள்ளிரவில் வாகனங்களை அடித்து நொறுக்கி, வேன் டிரைவரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். வழக்கமாக இவர் தனது வேனை வீட்டின் அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று நள்ளிரவும் தனது வேனை அங்கு நிறுத்தி விட்டு நாராயணன் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு போதையில் ஒரு கும்பல் வந்தது.
திடீரென அவர்கள் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர். தொடர்ந்து சில வீட்டின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். மேலும் அந்த கும்பல் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நாராயணனின் வேன் கண்ணாடியை அடித்து உடைத்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நாராயணன் அதனை தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்தது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த நாராயணனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)
