» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பைக்குகள் மோதி விபத்து: ஜவுளிகடை உரிமையாளர் சாவு
செவ்வாய் 11, மார்ச் 2025 7:57:26 PM (IST)
கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஜவுளிகடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குமரி மாவட்டம், கொட்டாரம் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் குங்கர்சிங் (25). இவர் தனது சகோதரர் சேத்தன் சிங்குடன் கொட்டாரம் பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு குங்கர்சிங் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி சென்றார். பின்னர் அங்கிருந்து கொட்டாரம் புறப்பட்டார்.
ரெயில் நிலையம் சந்திப்பு அருகே வந்த போது, எதிரே பறக்கை தெற்கு தெருவை சேர்ந்த பைசல் (24) மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராதவிதமாக இந்த 2 மோட்டார் சைக்கிள் களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் குங்கர் சிங், பைசல் மற்றும் அவருடன் வந்த பறக்கை யைச் சேர்ந்த இர்பான் (21) ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகர்கோவிலில்உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குங்கர்சிங் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிருஷ்ணன்கோவில் நியாயவிலைக்கடையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு
புதன் 19, மார்ச் 2025 5:07:27 PM (IST)

வேலைவாய்ப்புகளை பெருக்க தவறிய மத்திய அரசு: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி பேச்சு
புதன் 19, மார்ச் 2025 4:14:06 PM (IST)

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக பணிகள் விரைவில் துவங்கும்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:49:03 PM (IST)

கன்னியாகுமரியில் மும்பை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்
செவ்வாய் 18, மார்ச் 2025 11:49:32 AM (IST)

ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:35:02 AM (IST)

நாகர்கோவிலில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் இயக்கம் : தெற்கு ரயில்வே தகவல்!
செவ்வாய் 18, மார்ச் 2025 11:03:29 AM (IST)
