» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரியில் விமான நிலையம் : பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை
செவ்வாய் 11, மார்ச் 2025 5:49:51 PM (IST)
கன்னியாகுமரியில் பசுமை விமானநிலையம் அமைக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்பி கோரிக்கை வைத்துள்ளார்.

கன்னியாகுமரியை உலக தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக்க இங்கு ஒரு விமான நிலையம் மிக அவசியம். இங்கு ஒரு விமான நிலையம் அமையும் பட்சத்தில், இது இந்திய, தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவும். எமது மாவட்டத்தின் வேலை வாய்ப்பை பெருக்கவும், இந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் விமான நிலையம் துணை நிற்கும்.
மேலும் இந்த பகுதிக்கு ஏராளமான முதலீட்டை கொண்டு வருவதுடன் கன்னியாகுமரியை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற செய்ய ஒரு விமான நிலையம் தேவை. கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் தேவை என்ற மக்களின் நீண்ட நாள் கனவை நிஜமாக்கிட இந்த அவையின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

ஓ அப்படியாMar 11, 2025 - 06:55:17 PM | Posted IP 172.7*****