» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை: மத்திய அரசு அரசாணை
செவ்வாய் 6, மே 2025 4:05:49 PM (IST)
நாடு முழுவதும் நிகழும் சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு இனி இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுதும் கடந்த, 2023ம் ஆண்டு, 4.80 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 1.72 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
விபத்துகளின் போது உரிய நேரத்தில் முறையான சிகிச்சை கிடைக்காததால், உயிரிழப்புகள் அதிகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, சாலை விபத்தில் காயம் அடைந்தோருக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம் சோதனை முறையில் சண்டிகரில் மட்டும் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஆறு மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில், இலவச மருத்துவ திட்டத்தை நாடு முழுதும் விரிவுபடுத்துவதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சாலை விபத்துகளில் காயம் அடைவோருக்கான இலவச சிகிச்சை திட்டம், 2025, மே 5 முதல் நாடு முழுதும் அமலுக்கு வந்தது.
மோட்டார் வாகனங்களில் செல்லும்போது விபத்தில் சிக்கி காயம் அடையும் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சைக்கான தகுதி பெறுவர். போலீஸ், மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதார அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், தேசிய சுகாதார ஆணையம் இத்திட்டத்தை செயல்படுத்தும்.
விபத்து நடந்த நாளில் இருந்து முதல் ஏழு நாட்களுக்கு, 1.50 லட்சம் ரூபாய் வரையில் இத்திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே இந்த இலவச சிகிச்சை அளிக்கப்படும். பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் முதலுதவிக்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைக்கு மாற்றப்படுவர்.
இத்திட்டம் செயல்படுவதை கண்காணிக்க மத்திய சாலை போக்குவரத்து துறை செயலர் தலைமையில், 11 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆந்திராவில் லாரி - கார் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து: 6 பேர் உயிரிழப்பு!
சனி 24, மே 2025 5:47:07 PM (IST)

மாநிலங்களுக்கு 50% வரி பகிர்வு: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
சனி 24, மே 2025 4:44:41 PM (IST)

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: 4 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
சனி 24, மே 2025 12:28:31 PM (IST)

கேரளாவில் தொடரும் கனமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!!
வெள்ளி 23, மே 2025 5:29:42 PM (IST)

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது: இந்தியா உறுதி!
வெள்ளி 23, மே 2025 12:13:57 PM (IST)

கனிமொழி எம்.பி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்!
வியாழன் 22, மே 2025 4:34:48 PM (IST)
