» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக - அதிமுக ரகசியக் கூட்டணிக்கு இவர்கள்தான் ஒருங்கிணைப்பாளர்கள்: அமைச்சர் நிர்மல் குமார்
செவ்வாய் 14, ஜூலை 2026 4:05:40 PM (IST)

திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் கூட்டணி ஒருங்கிணைப்பாளர்களாக ராஜேந்திர பாலாஜியும், அனிதா ராதாகிருஷ்ணனும்தான் செயல்படப் போகிறார்கள் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு இடையே ரகசியக் கூட்டணி அமைப்பதற்கான ஒருங்கிணைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், தற்போதைய திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும்தான் இருக்கப் போகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக தென் மாவட்டங்களில் மாவட்ட அளவில் மட்டுமே சுருங்கிப் போய் உள்ளது என்றும், கட்சியின் பிற மட்டங்களில் எந்த நிர்வாகிகளும் இல்லை என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், அதிமுகவில் பொதுச் செயலாளர் (எடப்பாடி பழனிசாமி) என்று ஒருவர் இருப்பதாகவே அக்கட்சியின் தொண்டர்களுக்கு நினைவு இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள்தான் குதிரை பேர விவகாரங்களில் சிக்கியுள்ளனர் என்று அமைச்சர் நிர்மல் குமார் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயன்றால் மட்டுமே அது குதிரை பேரம் ஆகும் என்றும், மு.க.ஸ்டாலின் அல்லது எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வருவது குதிரை பேரம் ஆகாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இத்தகைய முடிவுகள் அந்தந்த மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட முடிவுகளாகும். தவெக யாரையும் வலுக்கட்டாயமாக அழைக்கவில்லை என்றும், தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தன்னிச்சையாக வருபவர்களைக் கட்சியில் சேர்க்க முடியாது என்று மறுக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் ஆர்.எஸ்.பாரதி குதிரை பேரம் தொடர்பாகச் சிபிஐ-க்குக் கடிதம் எழுதியிருப்பது பொழுதுபோக்குக்கான நடவடிக்கை மட்டுமே என நிர்மல் குமார் விமர்சித்துள்ளார். முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், முதலமைச்சரை நேரில் சந்திக்க உரிய அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இரு மொழிக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், பார்ட்டி ஃபண்ட் வசூல் தொடர்பாக வரும் புகார்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆண்டிபட்டி கிராமத்தில் எழுத்தாளர் பூமணியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
செவ்வாய் 14, ஜூலை 2026 5:10:32 PM (IST)

மேல்மருவத்தூரில் ரூ.10 லட்சம் மதிப்பில் நல உதவிகள்: கோ.ப.அன்பழகன் வழங்கினார்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:53:14 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நவம்பர் 1 தான் தமிழ்நாடு நாள்: பள்ளிகளில் ஜூலை 18 போட்டிகள் நடத்துவதற்கு அன்புமணி எதிர்ப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 12:56:40 PM (IST)

திமுக அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:48:48 PM (IST)

ஆடிஷன் என்ற பெயரில் நடிகையிடம் அத்துமீறல் : போலி தயாரிப்பாளர் உட்பட 3 பேர் கைது!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:22:47 PM (IST)


