» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி கடற்பகுதியில் பலத்த சூறாவளி காற்று: 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 10:24:04 AM (IST)

தூத்துக்குடி கடற்பகுதியில் வீசி வரும் பலத்த சூறாவளி காற்று காரணமாகப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 272 விசைப்படகுகளும் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படும் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 15-ஆம் தேதி முதல் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் சென்று வந்தனர். தற்போது மீன்பாடு அதிகமாக இருந்ததால் விசைப்படகு உரிமையாளர்களும் மீனவர்களும் தொழில் ரீதியாகச் சாதகமான சூழலில் இருந்து வந்தனர். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தினசரி காலை 5 மணிக்கு 272 விசைப்படகுகளில் கடலுக்குப் புறப்படும் மீனவர்கள், இரவு 9 மணிக்குக் கரை திரும்புவது வழக்கமாக இருந்தது.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 29) முதல் கடலில் காற்றின் வேகம் கணிசமாக அதிகரித்தது. கடல் சீற்றத்தினால் விசைப்படகுகளைச் செலுத்துவதிலும், மீன்பிடிப்பதிலும் மீனவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. இது குறித்து மீனவர்கள் விசைப்படகு உரிமையாளர்களுக்குத் தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து விசைப்படகு உரிமையாளர்கள் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தினர். கடலில் தற்போது மணிக்கு 60 கிலோமீட்டர் முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், பாதுகாப்பு கருதி இன்று (ஜூன் 30) கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் இன்று தொழிலுக்குச் செல்லாததால், அவர்களின் வாழ்வாதாரம் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழு : தமிழக அரசு உத்தரவு
செவ்வாய் 30, ஜூன் 2026 10:30:31 AM (IST)

இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் கைது!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:41:43 AM (IST)

மாயமான 5 வயது சிறுமி கிணற்றில் பிணமாக மீட்பு: கிணற்றில் வீசிக்கொலை செய்த பெண் கைது!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:39:41 AM (IST)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் மாங்கனித் திருவிழா: காரைக்கால் அம்மையாருக்கு அபிஷேகம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:37:32 AM (IST)

சொத்து முடக்கம் நீக்கத்திற்கு எதிரான வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:33:32 AM (IST)

நடுக்கடலில் தத்தளித்த மாலத்தீவு சரக்குக் கப்பல்: கடலோரக் காவல் படை விரைந்து மீட்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:21:22 AM (IST)


