» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் கைது!

செவ்வாய் 30, ஜூன் 2026 8:41:43 AM (IST)

ஆலங்குளத்தில் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின் கீழ், காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் அரி நாராயணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அரி நாராயணன் (55). காங்கிரஸ் பிரமுகரான இவர், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலராகப் பதவி வகித்து வருகிறார். மேலும் இவர் அப்பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் இவருடைய கூட்டுறவு சங்கத்தில் இளம் பெண் ஒருவர் வேலைக்குச் சேர்ந்தார். அந்தப் பெண்ணுக்கு அரி நாராயணன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஆலங்குளம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுவின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அரி நாராயணனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory