» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
திங்கள் 16, பிப்ரவரி 2026 10:19:26 AM (IST)

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.
தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 7-வது தெருவைச் சேர்ந்த ஜான்சன் (52) என்பவர், நேற்று மதியம் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு ஒன்றில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கால் தவறி கடலுக்குள் விழுந்து உயிரிழந்தார்.
மறைந்த ஜான்சனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக சுமார் 272 விசைப்படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஜான்சன் திருவுருவப் படத்திற்கு விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம், மீன்பிடி தொழிலாளர் சங்கம் உட்பட அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக ஒருமுறை கூடக் களங்கம் இல்லாத அரசைத் தந்ததில்லை: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி!
சனி 21, பிப்ரவரி 2026 5:32:49 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!
சனி 21, பிப்ரவரி 2026 4:57:11 PM (IST)

மதுரையில் ரூ.213 கோடி செலவில் புதிய மேம்பாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சனி 21, பிப்ரவரி 2026 4:29:11 PM (IST)

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி அறவழி உண்ணாநிலை போராட்டம்
சனி 21, பிப்ரவரி 2026 3:19:10 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன பூங்கா அமைய ஆய்வு: கவுன்சிலர் கோரிக்கை ஏற்பு
சனி 21, பிப்ரவரி 2026 3:16:23 PM (IST)

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடக்கம்!
சனி 21, பிப்ரவரி 2026 10:29:53 AM (IST)

