» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்​கல் பரி​சாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்​டும் : அரசுக்கு நயி​னார் நாகேந்​திரன் வேண்டுகோள்

வெள்ளி 28, நவம்பர் 2025 12:16:08 PM (IST)

தமிழக மக்​களுக்​கும் பொங்​கல் பரி​சாக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்​டும் என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்​பாக திருநெல்​வேலி​யில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர் கூறிய​தாவது: நான் யாரை​யும் சந்​திப்​ப​தற்​காக டெல்லி செல்​ல​வில்​லை. அது என்​னுடைய சொந்​தப் பயணம். முந்தா நாள் மதி​யம் சென்​று​விட்டு நேற்று காலை​யில் திரும்​பி​விட்​டேன். இதில் அரசி​யல் உள்​நோக்​கம் எது​வும் இல்​லை. செங்​கோட்​டையன் விஜய்​யின் தமிழக வெற்​றிக் கழகத்​தில் இணைந்​திருப்​ப​தால் அதி​முக - பாஜக கூட்​ட​ணிக்கு எந்​தப் பின்​னடை​வும் இல்​லை.

செங்​கோட்​டையன் 1977 முதல், 50 ஆண்​டு​களாக அரசி​யலில் இருக்​கும் மூத்த தலை​வர். எம்​ஜிஆர், ஜெயலலிதா மற்​றும் எடப்​பாடி பழனி​சாமி ஆகியோரின் அமைச்​சர​வை​யில் பணி​யாற்​றிய​வர். அதி​முக-வை பொறுத்​தவரை அதற்​கென தனி வாக்கு வங்கி உள்​ளது. ஒரு தலை​வர் வில​கிச் செல்​வ​தால் அந்த வாக்கு வங்கி அப்​படியே அவருடன் செல்​லுமா என்​பது கேள்விக்​குறி​தான். தேர்​தலுக்​குப் பின்​னரே அதன் தாக்​கம் தெரி​யும்.

தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் 2026-ல் கூட்​டணி ஆட்சி அமை​யும் எனக் கூறி உள்​ளார். கருத்​துச் சொல்ல அனை​வருக்​கும் உரிமை உண்​டு. ஆனால், எஜமானர்​களான வாக்​காளர்​களே அதை முடிவு செய்​வார்​கள். 2006-ல் திமுக மைனாரிட்டி அரசை அமைத்​ததைத் தவிர, தமிழக வரலாற்​றில் தனிப்​பெரும்​பான்மை கொண்ட ஆட்​சி​யைத்​தான் மக்​கள் தேர்வு செய்​துள்​ளனர்.

திமுக ஆட்​சிக்கு வந்த பிறகு சொத்​து​வரி மற்​றும் மின்​கட்​ட​ணத்தை 300 சதவீதம் உயர்த்​தி​யுள்​ளது. சொன்ன வாக்​குறு​தி​களை​யும் நிறைவேற்​ற​வில்​லை. ஆனால், பொங்​கல் பண்​டிகை வரவுள்ள நிலை​யில், கடந்த முறை ஆயிரம் ரூபாய் கொடுத்​தார்​கள். இந்த முறை மக்​கள் ரூ.5 ஆயிரம் எதிர்​பார்க்​கிறார்​கள்.

முதலமைச்​சர் என் தொகு​திக்கு பாலம், ரோடு, கல்​லூரி என நிறைய நன்​மை​களைச் செய்​துள்​ளார். அதே​போல் மக்​களுக்​கும் பொங்​கல் பரி​சாக ரூ.5000 வழங்க வேண்​டும் என்று நானும் கேட்​டுக்​கொள்​கிறேன். மக்​கள் இந்த அரசால் லட்ச ரூபாய் வரைக்​கும் நஷ்டத்​தில் இருக்​கை​யில், வெறும் ஆயிரம் ரூபாய் கொடுத்​தால் ஓட்​டுப் போடு​வார்​களா என்​பது சந்​தேகமே.

உலகின் மிகப்பெரிய கட்சி: பாஜக சுமார் 1,600-க்​கும் மேற்​பட்ட எம்​எல்​ஏ-க்​கள், 300-க்​கும் மேற்​பட்ட எம்​பி-க்​களைக் கொண்ட உலகின் மிகப்​பெரிய கட்​சி. தம்பி விஜய் இப்​போது​தான் கட்சி ஆரம்​பித்​திருக்​கிறார். அவர் இன்​னும் ஒரு கவுன்​சிலர் கூட ஆகவில்​லை. அப்​படிப்​பட்​ட​வர், எடுத்​தவுடனேயே லாங் ஜம்ப் செய்து உலகத்​தையே தாண்​டு​வேன் என்று சொல்​வது சரி​யாக இருக்​காது. தேர்​தலில் நின்று தன் பலத்தை நிரூபித்த பிறகு பேசலாம். எம்​ஜிஆர் கட்சி ஆரம்​பிக்​கும் முன்பே எம்​எல்​ஏ-​வாக​வும், திமுக-​வின் முக​மாக​வும் இருந்​தார். ஆனால் விஜய் இப்​போது நடிக​ராக மட்​டுமே உள்​ளார்.

பாஜகவுக்கே வந்திருக்கலாமே.. அதி​முக-​வில் இருந்​து​கொண்டு பாஜக-வை நம்​பினோம் என்று செங்​கோட்​டையன் சொல்​வது எப்​படிப் பொருத்​த​மாக இருக்​கும்? செங்​கோட்​டையன் தவெக-​வில் இணைந்​ததன் பின்​னணி​யில் பாஜக இருப்​ப​தாகத் திரு​மாவளவன் சொல்​வது தவறானது. பாஜக பின்​னணி​யில் இருந்​தால் அவர் ஏன் தவெக-வுக்​குச் செல்ல வேண்​டும்; பாஜக-வுக்கே வந்​திருக்​கலாமே.

பழனி​சாமி​யின் போக்கு காரண​மாகவே நிர்​வாகி​கள் வெளி​யேறு கிறார்​களா என்று கேட்​கிறீர்​கள். அடுத்த கட்​சிகளின் உள்​கட்சி விவ​காரங்​கள் குறித்து பேசுவது நாகரி​க​மாக இருக்​காது. டிடி​வி. தினகரன் கூறியது போல் மூன்​றாவது அணி அமைந்​தா​லும், நான்​காவது அணி அமைந்​தா​லும், 2026-ல் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​தான்​ ஆட்​சி​யைப்​ பிடிக்​கும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory