» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு: 2,632 பேர் எழுதினர்; 404 பேர் வரவில்லை!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:32:55 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 மையங்களில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வை 2,632 பேர் எழுதினர். 404 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு நேற்று தொடங்கியது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-ம் தாள் தேர்வு நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த முதல் தாள் ஆசிரியர் தகுதி தேர்வு தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 மையங்களில் நடந்தது. இந்த தேர்விற்கு மாவட்டம் முழுவதும் இருந்து 3 ஆயிரத்து 36 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் நேற்று நடந்த தேர்வில் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 632 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 404 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வை முன்னிட்டு தேர்வு நடந்த மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தூத்துக்குடியில் தேர்வு நடந்த விகாசா பள்ளி மையத்தை ஆட்சியர் இளம்பகவத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான 2-ம்தாள் தேர்வு இன்று நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 29 மையங்களில் நடைபெறும் இத்தேர்வில் கலந்து கொள்ள 9 ஆயிரத்து 150 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் கருக்கலைப்பு செய்ததால் கர்ப்பிணி உயிரிழப்பு: கணவர் உள்பட 3 பேர் கைது
வெள்ளி 12, டிசம்பர் 2025 11:32:06 AM (IST)

விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் உடன் கூட்டணி : த.வெ.க. கூட்டத்தில் தீர்மானம்
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:43:44 AM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2027 முதல் செயல்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 4:10:06 PM (IST)

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் விஜய்யின் முன்னாள் மேலாளர்!
வியாழன் 11, டிசம்பர் 2025 11:55:29 AM (IST)


.gif)