» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 8, செப்டம்பர் 2025 8:44:12 PM (IST)
ஏரல் அருகே நடந்த கொலை வழக்கில் 2பேருக்கு தலா ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம் இன்று (08.09.2025) குற்றவாளிகளான யோகராஜ் மற்றும் சுடலைமணி ஆகிய இருவருக்கும் தலா ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூபாய் 10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் அரவிந்த் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
இந்த ஆண்டு கடந்த 8 மாதங்களில் மட்டும் மொத்தம் 17 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய் உட்பட 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 9:08:01 PM (IST)

இளையராஜாவுக்கு 13ம் தேதி பாராட்டு விழா : தமிழக அரசு அறிவிப்பு
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 5:36:11 PM (IST)

தோல்வி பயத்தால் தவெக நிர்வாகிகள் மீது வழக்கு : திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 5:11:10 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் மீது ஸ்பிரே அடித்த சிறுவன்: போலீசார் விசாரணை
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 4:33:07 PM (IST)

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 3:45:03 PM (IST)

தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் : பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவகத்தில் மனு!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 3:37:59 PM (IST)

முட்டால்Sep 9, 2025 - 07:09:29 AM | Posted IP 104.2*****