» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்

செவ்வாய் 9, செப்டம்பர் 2025 3:45:03 PM (IST)

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றி பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடுவிதித்தார். இதையடுத்து அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.

இதையடுத்து, செங்கோட்டையன் நேற்று டெல்லி சென்றார். கோவிலுக்கு செல்வதாகவும், மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்வதாகவும் செய்தியாளர்களிடம் கூறிய செங்கோட்டையன் டெல்லி சென்றார். டெல்லியில் பாஜக மூத்த தலைவர், உள்துறை மந்திரி அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தார்.

இந்நிலையில், டெல்லியில் இருந்து செங்கோட்டையன் இன்று தமிழகம் திரும்பினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறுகையில், ஹரித்வார் செல்வதாக கூறினேன். அமித்ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினேன். அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். 

கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று பேசினேன். இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றிய கருத்துகள் அங்கு பரிமாறப்பட்டன. அதிமுக இயக்கம் வலுப்பெற வேண்டுமென கருத்துகளை முன்வைத்தேன். மக்கள் பணி, இயக்கம் வலிமைபெறவும் பணிகளை தொடர்ந்து ஆற்றுவேன் இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory