» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையை ஏற்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சனி 22, மார்ச் 2025 11:17:07 AM (IST)
தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒரு போதும் ஏற்கக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க தலைவர்கள் ஒன்றிணையும் இந்நாள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள். இந்திய கூட்டாட்சியை காக்கும் மிக மிக முக்கியமான நாளாக வரலாற்றில் இந்த நாள் அமைய போகிறது. இந்திய வரலாற்றில் ஒரு கட்சியின் அழைப்பை ஏற்று இத்தனை கட்சிகள் வந்திருப்பது தனிச்சிறப்பு.
ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளதை உங்கள் வருகை இந்தியாவிற்கு உணர்த்துகிறது. மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால் தான் கூட்டாட்சி தன்மை நிலைத்திருக்கும். தொகுதி மறுசீரமைப்பு நமது மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகிறது என்பதால் கடுமையாக எதிர்க்கிறோம்.
தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒரு போதும் ஏற்கக்கூடாது. மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்தால் தமது நீதிக்கான குரலும் குறையும். மணிப்பூர் மக்களின் குரலை கேட்க மத்திய அரசு தயாராக இல்லை என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 8:09:48 PM (IST)

பாம்பன் புதிய பாலம்; ராமேசுவரம் - தாம்பரம் ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 2:01:19 PM (IST)

கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் பிரதமர் மோடி அறிவிப்பாரா? பயணிகள் கோரிக்கை
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 10:44:42 AM (IST)

தர்பூசணி விவகாரம் : உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம்!
சனி 5, ஏப்ரல் 2025 5:41:21 PM (IST)

தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறந்த வழக்கில் 9பேருக்கு ஆயுள் தண்டனை
சனி 5, ஏப்ரல் 2025 4:40:15 PM (IST)

ஆட்சியரின் என்ஆர்ஐ கணக்கிலிருந்த ரூ.11 லட்சம் மோசடி: வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் கைது
சனி 5, ஏப்ரல் 2025 11:25:34 AM (IST)
