» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
புதன் 6, நவம்பர் 2024 4:25:27 PM (IST)

மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசன பிசான பருவ சாகுபடிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், இன்று தண்ணீர் திறந்து வைத்து, மலர் தூவினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் 2756.62 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு இன்று (11.06.2024) முதல் 31.03.2025 வரை 146 நாட்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 35 கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இதன் மூலம், அம்பாசமுத்திரம் வட்டத்தைச் சார்ந்த ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், தெற்கு கல்லிடைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் பாசன பரப்பு பயன்பெறும். எனவே, விவசாய பெருமக்கள் தண்ணீரை மிக சிக்கனமாக பயன்படுத்தவும், நீர் விநியோக பணியில் நீர்வளத்துறைக்கு விவசாய பெருமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பரணிசேகர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) வில்லியம் ஜேசுதாஸ், செயற்பொறியாளர் மதனசுதாகரன், உதவி செயற்பொறியாளர் முருகன், மணிமுத்தாறு பேரூராட்சி தலைவர் அந்தோணி அம்மாள், வட்டாட்சியர் நவாஸ், உதவி பொறியாளர்கள் ராம்சூரியா, தினேஷ்குமார், உட்பட அரசு அலுவலர்கள் மற்றம் விவசாய பெருமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத் தேசிய மாநாடு: டி.எஸ்.ஆர். சுபாஷ் தேசிய செயலாளராகத் தேர்வு!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:43:23 PM (IST)

ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: 2 சிறுவர்கள் உட்பட 3பேர் கைது - பட்டப்பகலில் பயங்கரம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:43:06 PM (IST)

நாம் தமிழர் கட்சியினர் சட்டப்பேரவை செல்ல வேண்டும் : மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சேரன்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:10:13 PM (IST)

தனி தொகுதிகளில் போட்டியிடும் வேற்று மதத்தவர் வேட்புமனு தள்ளுபடி: இந்து முன்னணி வலியுறுத்தல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:05:02 PM (IST)

தேர்தல் பார்வையாளர்களை நேரில் சந்தித்துப் புகார் அளிக்கலாம்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 4:44:06 PM (IST)

எந்தத் தொகுதியில் நின்றாலும் நெல்லைக்கு செல்லப்பிள்ளை நான்: நயினார் நாகேந்திரன்
செவ்வாய் 31, மார்ச் 2026 3:48:10 PM (IST)

