» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாணவர்களுக்குக் காலை உணவுக்குப் பதில் பிஸ்கட் விநியோகம்: 3 பேர் பணிநீக்கம்!

திங்கள் 22, ஜூன் 2026 8:17:10 PM (IST)

விளாத்திகுளம் ஒன்றியத் துவக்கப்பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுக்குப் பதிலாக பிஸ்கட் வழங்கப்பட்ட புகாரில், பணியாளர்கள் மூவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியத் துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தில் முறைகேடு மற்றும் பற்றாக்குறை நிலவுவதாகப் புகார் எழுந்தது. இப்புகார் தொடர்பாகத் தொடக்கப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் நேரடியாகப் பள்ளிக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினார். 

விசாரணையில், புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றதற்குப் பின், அதற்கேற்ப உணவுப் பொருட்களுக்கான திருத்தப்பட்ட தேவைப் பட்டியலை மகளிர் சுயஉதவிக் குழுவினர் முறையாகச் சமர்ப்பிக்கவில்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாகவே மாணவர்களுக்குக் காலை உணவு பற்றாக்குறை ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த காலை உணவுத் திட்ட கணக்காளர், சமையலர் மற்றும் உதவியாளர் ஆகிய மூவரையும் பணியில் இருந்து நீக்க அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். அதன்படி, மகளிர் சுயஉதவிக் குழு கூட்டத்தில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்கள் மூவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியைக்குக் கல்வித்துறை அதிகாரிகள் குறிப்பாணை (மெமோ) வழங்கியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory