» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மாற்றுத்திறனாளிகளிடம் கனிவுடன் நடக்க வேண்டும் : ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 22, ஜூன் 2026 8:11:57 PM (IST)
அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிப் பயணிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் மற்றும் அவர்களுக்கான இருக்கைகளை அனுமதிப்பதிலும் எவ்வித புகார்களுக்கு இடமளிக்காத வகையில் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குக் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளார்!
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (திருநெல்வேலி) நாகர்கோவில் மண்டலம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஏற்கனவே தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் மற்றும் இருக்கை அனுமதிப்பதிலும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்குரிய இருக்கை, சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிக்கே வழங்கப்படுவதை நடத்துநர் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் கனிவான முறையில் நடத்தப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக இருக்கைகளில் பிற பயணிகள் அமர்ந்திருக்கும் பட்சத்தில், மாற்றுத்திறனாளிப் பயணி பேருந்தில் ஏறும் போது அந்த இருக்கையை அவருக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பயணியிடம் நடத்துநர் கனிவுடன் கேட்டு வாங்கித் தர வேண்டும்.
எனவே, பொதுமக்களிடமிருந்தோ அல்லது மாற்றுத்திறனாளிகளிடமிருந்தோ எந்தவித புகார்களும் வராத வண்ணம் மேற்கண்ட அறிவுரைகளைத் துல்லியமாகக் கடைபிடித்துச் செயல்படுத்துமாறு அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்: தோவாளையில் சிறப்பு பிங்க் கிராம சபை கூட்டம்!
சனி 20, ஜூன் 2026 5:47:51 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் நிறுத்தங்கள் கிடைக்குமா? பயணிகள் கோரிக்கை!
சனி 20, ஜூன் 2026 3:17:40 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் - ஆட்சியர் ஆய்வு!
சனி 20, ஜூன் 2026 12:48:36 PM (IST)

மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறித்த தூத்துக்குடி பெண் கைது: அரசுப் பேருந்தில் பரபரப்பு!
சனி 20, ஜூன் 2026 8:21:30 AM (IST)

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலை நாகர்கோவிலில் இருந்து இயக்கக் கோரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 10:08:26 AM (IST)

திரிவேணி சங்கமத்தில் ஜூன் 26-ல் குமரி விழா தொடக்கம் - சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!
வியாழன் 18, ஜூன் 2026 8:06:58 PM (IST)


