» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திரிவேணி சங்கமத்தில் ஜூன் 26-ல் குமரி விழா தொடக்கம் - சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!
வியாழன் 18, ஜூன் 2026 8:06:58 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மாபெரும் "குமரி திருவிழா" நிகழ்ச்சிகள் வரும் ஜூன் 26-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 5 நாட்கள் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படவுள்ளன.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலும், அவர்கள் மீண்டும் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களுக்கு வந்து கண்டுகளிக்கும் வகையிலும் கன்னியாகுமரி, முட்டம், லெமூர் கடற்கரை, பேச்சிப்பாறை, மாத்தூர் தொட்டிப்பாலம், திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க "பெருவிழா நம்ம குமரி திருவிழா" என்ற மையப்பொருளைக் கொண்டு 5 நாட்களுக்குப் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இத்திருவிழா நாட்கள் ஒவ்வொன்றிலும் மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் உள்மாநில மற்றும் அயல்மாநிலக் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. இதில் பல்வேறு கலை வடிவங்கள், திரைப்பட மற்றும் சின்னத்திரை பிரபலங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
நடைபெறவுள்ள இம்மாபெரும் திருவிழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்ள உள்ளனர். எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இந்த ஐந்து நாள் திருவிழாவில் பெருந்திரளாகப் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, குமரி திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் (RDO) எஸ்.காளீஸ்வரி தலைமையில் துறை அதிகாரிகளுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் சிவபுகழ், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)


