» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் இன்று இரவு தற்காலிக மூடல்: மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தல்!

புதன் 22, ஏப்ரல் 2026 3:20:23 PM (IST)

தூத்துக்குடி நகரின் முக்கிய போக்குவரத்துப் பகுதியான 2-வது ரயில்வே கேட், அவசர கால பராமரிப்புப் பணிகளுக்காக இன்று இரவு தற்காலிகமாக மூடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் தூத்துக்குடி முதுநிலை பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரயில்வே கேட் எண் 486 (ECR ரோடு மற்றும் WGC ரோடு இணைப்புப் பகுதி) இன்று (22.04.2026) இரவு 10:00 மணி முதல் நாளை (23.04.2026) காலை 06:00 மணி வரை ரயில்வே தண்டவாளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர கால பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட உள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ரயில் போக்குவரத்தைச் சீரமைக்கும் நோக்கில் இந்த பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாளை காலை 6 மணிக்கு பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து வழக்கம்போல் தொடங்கும். எனவே, இரவு நேரப் பயணத்தை மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Apr 23, 2026 - 09:25:26 AM | Posted IP 162.1*****

நீங்க தேர்ந்தெடுத்த துட்டு அரசியல்வாதிகளை தான் எல்லாம் செய்யணும்

THAMILANApr 22, 2026 - 05:59:38 PM | Posted IP 104.2*****

இரண்டாம் ரயில்வே கேட் அடிக்கடி பழுதாகிறது அதை முதலில் சரி செய்யவும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory