» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேர்தல் எதிரொலி : குமரியில் திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலத்திற்கு படகு சேவை ரத்து!
புதன் 22, ஏப்ரல் 2026 5:29:39 PM (IST)
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியின் முக்கிய அடையாளங்களான கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலம் ஆகியவற்றை இணைக்கும் படகு போக்குவரத்து நாளை ஒரு நாள் மட்டும் செயல்படாது.
தேர்தல் நாளில் அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதாலும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (ஏப்ரல் 24) முதல் வழக்கம் போலப் படகு சேவை தொடங்கும் எனப் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதனால் நாளை கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கடற்கரை பகுதிகளில் நின்று கடலின் அழகை ரசிக்கத் தடை ஏதுமில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணம் மோசடி: சப்-இன்ஸ்பெக்டர் மீது நாயை ஏவிக் கடிக்க வைத்த கொடூரம் - தம்பதி அதிரடி கைது!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:45:53 PM (IST)

தேங்காப்பட்டணம், குளச்சல் கடற்கரை பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் ஆய்வு!
திங்கள் 8, ஜூன் 2026 8:41:33 PM (IST)

மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் விஜய் அரசு தீர்வு காணும்: அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் உறுதி!
திங்கள் 8, ஜூன் 2026 5:27:22 PM (IST)

குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 4:23:02 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு மையம் தொடக்கம்: ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
சனி 6, ஜூன் 2026 12:30:28 PM (IST)


