» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை தீவிரம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:35:13 PM (IST)

கன்னியாகுமரியில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பொதுமக்களுக்கு இடையூறு இன்றி, தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை உறுதிப்படுத்தும் வகையில், துவரங்காடு பகுதியில் நடைபெற்று வரும் பறக்கும் படை வாகன சோதனையை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மாவட்டத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்த தகவல்கள்: மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் 21 பறக்கும் படைகளும், 24 நிலையான கண்காணிப்புப் படைகளும் 8 மணி நேரச் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றன.தேர்தல் நடத்தை விதிமீறல்களைத் தடுக்கவும், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களைக் கைப்பற்றவும் இப்படைகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
துவரங்காடு பகுதியில் நடைபெற்ற ஆய்வின் போது, வாகனங்களை நிறுத்திச் சோதனை செய்யும் முறை, ஆவணங்களைச் சரிபார்த்தல் மற்றும் சோதனையை வீடியோ பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், கைப்பற்றப்படும் பொருட்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பணப்புழக்கம் குறித்துப் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் அவர் சரிபார்த்தார்.
வாகன சோதனையின் போது பொதுமக்களுக்குத் தேவையற்ற இடையூறுகள் ஏற்படாத வகையில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், அதே சமயம் விதிமீறல்கள் நடைபெறாத வண்ணம் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழர்களை நேருக்கு நேர் நின்று சரணடைய வைக்க முடியாது: பாஜக - அதிமுக மீது ராகுல் கடும் தாக்கு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:50:35 PM (IST)

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)

நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 5:33:58 PM (IST)

