» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சென்னை டூ நாகர்கோவில் நாளை சிறப்பு ரயில் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:35:28 AM (IST)
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை சிறப்பு ரயில் (வண்டி எண்: 06072) அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 22 ஆம் தேதி (நாளை) பிற்பகல் 01.25 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம் வழியாக திருச்சிக்கு இரவு 07.35 மணிக்கு வந்து சேரும்.
திருச்சியில் இருந்து 07.45 மணிக்கு கிளம்பும் ரயில் திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சத்தூர், கோவில் பட்டி, நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு 23 ஆம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு வந்து சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்குகிறது. வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்: ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:51:36 PM (IST)

ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் சாதனை!
வியாழன் 4, ஜூன் 2026 12:44:31 PM (IST)

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)

குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் மரியாதை!
திங்கள் 1, ஜூன் 2026 3:30:44 PM (IST)

ஜூன் 1 முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை: குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 30, மே 2026 4:02:42 PM (IST)


