» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் ரயில்வே கேட் மீது ஆட்டோ மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு - பொதுமக்கள் கடும் அவதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:17:01 PM (IST)

தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான 2-வது ரயில்வே கேட் மீது ஆட்டோ மோதியதில் கேட் பழுதடைந்து பூட்டிக்கொண்டதால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை முதல் நடைமேடைக்குக் கொண்டு வருவதற்காக, இன்று மாலை 1-ஆம் கேட் மற்றும் 2-ஆம் கேட் ஆகியவை மூடப்பட்டன. அப்போது 2-வது ரயில்வே கேட்டில் ஒருபுறம் மூடிய நிலையில், மறுபுறம் கேட் மூடுவதற்கு முன்பாக வேகமாக வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாக ரயில்வே கேட் மீது மோதியது.
இந்த மோதலில் ரயில்வே கேட் பலத்த சேதமடைந்து, தானாகப் பூட்டிக்கொண்டது. இதனால் அந்தச் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. நகரின் முக்கியச் சந்திப்பு என்பதால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் விரைந்து வந்து, விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் கடும் அவதி
தூத்துக்குடியில் ஒன்றாவது ரயில்வே கேட்டில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த ரயில்வே கேட் ஏற்கனவே மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டாம் ரயில்வே கேட் இன்று மாலை ஆட்டோ மோதி பழுதானதால் அந்த கேட்டும் மூடப்பட்டது. இரண்டு கேட்டு களும் மூடப்பட்டதால் புது பஸ் ஸ்டாண்ட் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர்.
மக்கள் கருத்து
மனிதன்Apr 22, 2026 - 08:00:01 AM | Posted IP 162.1*****
ஆளும் கட்சி நினைத்து இருந்தால் பாலம் போட்டு இருக்கலாம், நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போன வரலாறு பேசும்
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை: எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ புகார்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:52:32 PM (IST)

தேர்தல் எதிரொலி : குமரியில் திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலத்திற்கு படகு சேவை ரத்து!
புதன் 22, ஏப்ரல் 2026 5:29:39 PM (IST)

சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கல்: 306 மது பாட்டில்கள் பறிமுதல்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:29:44 PM (IST)

தேர்வு முடிவு பயம்: 10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை – பெற்றோர்கள் சோகம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:23:00 AM (IST)

சென்னை டூ நாகர்கோவில் நாளை சிறப்பு ரயில் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:35:28 AM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை தீவிரம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:35:13 PM (IST)


tutyanApr 22, 2026 - 10:10:11 AM | Posted IP 104.2*****