» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆட்சியர் காரை மறித்து அவதூறு பேசிய வாலிபர்; கார் பறிமுதல் – போலீஸ் விசாரணை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 7:56:38 AM (IST)
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியரின் காரை மதுபோதையில் வாலிபர் ஒருவர் சொகுசு காரில் துரத்தி வந்து, அவதூறாகப் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான திரு. விஷூ மகாஜன், நேற்று முன்தினம் மாலையில் தேர்தல் ஆய்வுப் பணிகளுக்காகக் காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் உதவியாளர் மற்றும் பாதுகாப்புப் போலீசார் இருந்தனர். ஆட்சியரின் கார் தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் 3-வது மைல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வெள்ளை நிற சொகுசு காரில் வந்த வாலிபர் ஒருவர் ஆட்சியரின் காரை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.
முந்திச் செல்ல முடியாத ஆத்திரத்தில், அந்த வாலிபர் ஆட்சியரின் காரைத் தொடர்ந்து அதிவேகமாகத் துரத்தி வந்துள்ளார். ஆட்சியரின் கார் வி.வி.டி சிக்னல் அருகே வந்தபோது சிவப்பு விளக்கு எரிந்ததால் நிறுத்தப்பட்டது. அப்போது பின்னால் துரத்தி வந்த வாலிபர், ஆட்சியரின் காரை முந்திச் சென்று குறுக்காகத் தனது காரை நிறுத்தினார். மேலும், காரில் இருந்தவாறே ஆட்சியரைப் பார்த்து அந்த வாலிபர் அவதூறான வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த அந்த வாலிபரைக் கண்டறிந்த போலீசார், அவர் பயன்படுத்திய சொகுசு காரை நேற்று பறிமுதல் செய்தனர்.
மதுபோதையில் இத்தகைய அநாகரிகச் செயலில் ஈடுபட்ட அந்த வாலிபரைப் பிடித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா : மேரி பிரின்சி லதா பொறுப்பு மேயராக நியமனம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:33:05 PM (IST)

குமரியில் தேர்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிர்வாகிகள் உட்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:24:39 PM (IST)

காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை: மார்த்தாண்டம் அருகே சோகம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:22:09 PM (IST)

கிறிஸ்தவ மக்கள் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்: குமரியில் பாதிரியாரின் பகிரங்க பிரச்சாரம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 3:15:51 PM (IST)

தென் தமிழகத்தின் நீண்டகாலக் கனவு: கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் நனவாகுமா?
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:38:39 AM (IST)

நாகர்கோவிலில் புதிய இரட்டை ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்தது: பயணிகள் மகிழ்ச்சி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:08:39 AM (IST)


BabuApr 6, 2026 - 09:09:16 AM | Posted IP 104.2*****