» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கிறிஸ்தவ மக்கள் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்: குமரியில் பாதிரியாரின் பகிரங்க பிரச்சாரம்!

திங்கள் 6, ஏப்ரல் 2026 3:15:51 PM (IST)



பிரதமர் மோடியின் நிர்வாகத்திறனால் சர்வதேச அரங்கில் மற்ற நாடுகள் வியந்து பார்க்கும் வகையில் இந்தியா அசுர வளர்ச்சி அடைந்துள்ளது என்று கிறிஸ்தவப் பாதிரியார்  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை விளக்கி, கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவர் பாஜாகாவிற்கு ஆதரவாகப் பகிரங்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் தனது பிரச்சாரத்தில் "பிரதமர் மோடியின் நிர்வாகத்திறனால் நாடு பல பயனுள்ள திட்டங்களைக் கண்டுள்ளது. சர்வதேச அரங்கில் மற்ற நாடுகள் வியந்து பார்க்கும் வகையில் இந்தியா அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பல்வேறு பிரம்மாண்ட வளர்ச்சிப் பணிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போதைய ஆட்சியில் நடந்துள்ளன.

உண்மையான மதச்சார்பற்ற அரசு என்றால் அது மோடி அரசுதான்" என்று குறிப்பிட்ட அவர், கிறிஸ்தவ மக்கள் அனைவரும் மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமைய வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கிறிஸ்தவ மத குரு ஒருவர் நேரடியாக மத்திய அரசின் திட்டங்களைப் பாராட்டி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory