» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை: மார்த்தாண்டம் அருகே சோகம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:22:09 PM (IST)
மார்த்தாண்டம் அருகே காதலி பேசாத காரணத்தால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அடுத்த காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் அபி (23). 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், கேரளா மாநிலத்தில் தேன் பெட்டி தொழில் செய்து வந்தார். தற்போது ஈஸ்டர் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
ஊருக்கு வந்த நாள் முதல் அபி யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்து வந்துள்ளார். விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகவும், சமீபகாலமாக அந்தப் பெண் அவரிடம் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அபி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் வீட்டிற்கு வந்த அபி, உணவு சாப்பிட மறுத்துவிட்டுத் தனது அறைக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது அபி மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேச்சிப்பாறை போலீசார், அபியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை தீவிரம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:35:13 PM (IST)

தமிழர்களை நேருக்கு நேர் நின்று சரணடைய வைக்க முடியாது: பாஜக - அதிமுக மீது ராகுல் கடும் தாக்கு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:50:35 PM (IST)

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)

